றொரன்டோ ரெக்ஸ்டேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்து நிலையில் இருப்பதாகவும் மற்றுமொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.