Date:

விஜய் சேதுபதியின் செயலுக்கு பாராட்டு

தமிழகத்தையும் கொரோனாத் தொற்றுப்பரவலானது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சரைநேரில் சந்தித்தும், ஒன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக   நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபா 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனாத் தொற்று தடுப்பு பணிகளுக்காக  25 லட்சம் ரூபாவை  வழங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...

சீக்கிய தேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தும் அம்ரித்பால் -காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு

அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை...