Date:

விஜய் சேதுபதியின் செயலுக்கு பாராட்டு

தமிழகத்தையும் கொரோனாத் தொற்றுப்பரவலானது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சரைநேரில் சந்தித்தும், ஒன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக   நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபா 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனாத் தொற்று தடுப்பு பணிகளுக்காக  25 லட்சம் ரூபாவை  வழங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...