Date:

விஜய் சேதுபதியின் செயலுக்கு பாராட்டு

தமிழகத்தையும் கொரோனாத் தொற்றுப்பரவலானது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சரைநேரில் சந்தித்தும், ஒன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக   நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபா 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனாத் தொற்று தடுப்பு பணிகளுக்காக  25 லட்சம் ரூபாவை  வழங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...