Date:

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 3 நாட்களில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி (அத்துகல்புர நுழைவு) திறக்கப்பட்டு மூன்று நாட்களில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் சுமார் 50,000 வாகனங்கள் குறித்த பகுதி ஊடாக பயணித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி திறக்கப்பட்ட நாள் முதல் மறுநாள் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதற்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு பணம் அறவிடப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (15) மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் இலவசமாக பயணிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த  நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (16) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை (17) நள்ளிரவு வரை 23,039 வாகனங்கள் பயணித்துள்ளன.

இந்த மூன்று நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் 17ஆம் திகதியன்றே பயணித்துள்ளன.

அன்றைய தினம் 48 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373