நாட்டில் மேலும் 479 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (14) மாத்திரம் இதுவரையில் 2 ஆயிரத்து 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 897ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.