இம்மாதம் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் 66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.