Date:

“கல்விக்கு கரம் கொடுப்போம்” வருடாந்த வேலைத்திட்டம்

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் இன் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில்  நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான உயர்தர பாடசாலைகள் அனைத்திற்கும் மாதிரி வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று (16) நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ்  தலைமையில் கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரியில் (தேசிய பாடசாலை) முதற்கட்டமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கா.பொ.த உயர்த்தரத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் உரிய பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், கல்லூரியின் அதிபர் ஓம்பிரகாஷ், பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

-டி.சந்ரு செ.திவாகரன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி; இளைஞர் ருஷ்தி பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை...

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை...

சாமர சம்பத் மீள விளக்கமறியலில்

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       அரசியல்வாதிகள் உட்பட...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373