Date:

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இன்று காலை நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், இன்று காலை வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எவ்வித பரிந்துரையும் பெறப்படவில்லை எனக் கூறினார்.
”ஜனாதிபதி அல்லது செயலணியிடமிருந்து இது போன்ற எந்தவொரு பரிந்துரையும் பெறப்படவில்லை; வழக்கமாக அவ்வாறு இருந்தால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும்” என்றார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 14இல் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க இன்னும் ஒரு வாரம் உள்ளது எனக் கூறிய அவர், நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்பே ஒரு முடிவு எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்! – கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச்...

ஜப்பானில் நிலநடுக்கம்..! | சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்...

வானளவு உயரும் முட்டையின் விலை..!

நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட...

அனர்த்தங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை...