Date:

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இன்று காலை நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், இன்று காலை வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எவ்வித பரிந்துரையும் பெறப்படவில்லை எனக் கூறினார்.
”ஜனாதிபதி அல்லது செயலணியிடமிருந்து இது போன்ற எந்தவொரு பரிந்துரையும் பெறப்படவில்லை; வழக்கமாக அவ்வாறு இருந்தால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும்” என்றார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 14இல் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க இன்னும் ஒரு வாரம் உள்ளது எனக் கூறிய அவர், நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்பே ஒரு முடிவு எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி...