Date:

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கடந்த இரு வாரங்களில் எவரும் இலங்கை வரவில்லை!

தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலா பயணிகள் எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்துவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தவிர்ந்த வேறு எவரேனும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சுகாதார தரப்பினரால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரொன் திரிபின் அபாயம் காரணமாக மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இன்று (28) இரவு முதல் இலங்கை தர தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...