Date:

பஹல கடுகண்ணாவ மண்சரிவு அபாய பகுதியை சீர்செய்ய ஆலோசனை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய பகுதியை சீர்செய்து, வர்த்தக நிலையங்களை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற விசேட அமர்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது தொடர்பான அறிவுறுத்தல் நேற்று (23) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உரிய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவினரும், கடுகண்ணாவ வர்த்தகர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிய வருகின்றது.

பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அடுத்து, கடந்த 10ம் திகதி அந்த வீதியூடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...