Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்

இலங்கையில் இருந்து டுபாய் நோக்கி கொண்டு செல்ல முயற்சித்த ஒரு கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பணத்துடன் சந்தேக நபர் ஒருவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபாய் இலங்கை பணம் மற்றும் 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பணி புரியும் சுங்க அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...