Date:

பாதீடு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 13 ஆம் திகதி தொடங்கிய இந்த விவாதத்தின் ஏழாவது நாள் இன்றாகும். பாதீடு மீதான குழுநிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று (21) பிற்பகல் கூடி, பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் நேற்று (21) கூடி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்ததாக அந்தக் கட்சியின் சட்டத்துறை பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

மேலும், இன்று (22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...