Date:

கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு!

நாவுல – அம்பன சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அண்மையில் நாவுல – அம்பன பிரதேச வைத்தியசாலையில் பிரத்தியேக சிகிச்சை மையமொன்று நிறுவப்பட்டது.

நோயாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் இந்தச் சிகிச்சை மையம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தளை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இங்குத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் மேற்பார்வையின் கீழ் தமக்கு உணவு வழங்கப்படுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுவது தொடர்பில் மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமிந்த வீரகோனிடம் நாம் வினவியபோது, ​​நோயாளர்கள் தமக்கு இது தொடர்பில் அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக உடன் அமுலாகும் வகையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் 26ஆவது மேயராக பல்த்தசார் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் (CMC) 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்...

இன்று 3.30க்கு அவசர விவாதம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 3.30 மணிக்கு...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...

கொலன்னாவ நகர சபையும் திசைகாட்டி வசம்!

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18)...