Date:

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital Card) முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இந்த புதிய நடைமுறையின் ஊடாக எரிபொருள் தேவைக்கேற்ப, நிகழ்நிலை வங்கி முறைமையின் ஊடாக அதற்குரிய பணத்தை மீளச் செலுத்த முடியும்.

 

மேலும் தனிநபர்களின் தலையீடு குறைவடைவதால், அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

 

அத்துடன் முறையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது இலங்கை வங்கி மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் (CEYPETCO) ஆகியன இணைந்து இந்த டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

 

இதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனக் கூட்டமைப்புக்கு இந்த முறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட திணைக்கள வாகனங்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு...

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத்...

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.   ஈரான் மீதான...

பல நாடுகளின் வான்பரப்புகள் மூடல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள்...