Date:

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital Card) முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இந்த புதிய நடைமுறையின் ஊடாக எரிபொருள் தேவைக்கேற்ப, நிகழ்நிலை வங்கி முறைமையின் ஊடாக அதற்குரிய பணத்தை மீளச் செலுத்த முடியும்.

 

மேலும் தனிநபர்களின் தலையீடு குறைவடைவதால், அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

 

அத்துடன் முறையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது இலங்கை வங்கி மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் (CEYPETCO) ஆகியன இணைந்து இந்த டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

 

இதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனக் கூட்டமைப்புக்கு இந்த முறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட திணைக்கள வாகனங்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின்...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...