Date:

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச கொள்வனவு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்தின் போது ஒரு கிலோ நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும், சம்பா 125 ரூபாவிற்கும், கீரிசம்பா 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

 

எனினும், வரும் போகங்களில் விவசாயிகள் சம்பா மற்றும் கீரிசம்பா பயிர்ச்செய்கையில் அதிக ஆர்வம் காட்டுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றின் விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய நாட்டரிசி நெல்: ஒரு கிலோ 120 ரூபா (விலையில் மாற்றமில்லை)

 

சம்பா நெல்: ஒரு கிலோ 125 ரூபாவிலிருந்து 130 ரூபாவாக அதிகரிப்பு

 

கீரிசம்பா நெல்: ஒரு கிலோ 132 ரூபாவிலிருந்து 140 ரூபாவாக அதிகரிப்பு

 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சந்தையில் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...