Date:

அரிசி மற்றும் சீனி கொள்வனவு தொடர்பில் பந்துலவின் அறிவிப்பு

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை இன்று (6) முதல் அமுலாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 04 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, சதொசவில் அரிசி மற்றும் சீனி என்பவற்றை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரிசி, சீனி, மஞ்சள் போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, அவற்றுடன் மேலும் 5 பொருட்களையேனும் கொள்வனவு செய்யாவிட்டால், அரிசி மற்றும் சீனியை மாத்திரம் விற்பனை செய்யும் கொள்கை பின்பற்றப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று முதல் குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373