Date:

இலங்கைக்கு இரங்கல் தெரிவித்த பாப்பரசர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பாப்பரசர் லியோ தனது இரங்கலை தெரிவித்தள்ளார். குறித்த தருணத்தில் வத்திக்கான் இலங்கை மக்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கத் தயார் எனவும் பாப்பரசர் பதின்நான்காம் லியோ அறிவித்துள்ளார்.

 

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மான்சிக்னோர் ரொபர்டோ லுச்சினி குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலைத் தெரிவிக்கவும், இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கு தனது ஒற்றுமையை உறுதியளிக்குமாறு, பாப்பரசர் லியோ தம்மிடம் தெரிவித்ததாக லுச்சினி கூறியுள்ளார்.

 

இந்த பேரிடருக்குப் பின்னரான சூழ்நிலையில் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் இலங்கை மக்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக, வணக்கத்துக்குரிய மான்சிக்னோர் ரொபர்டோ லுச்சினி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...

முட்டை விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில்...

பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த...

பாலர் பாடசாலைகளும் ஆரம்பம்!

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப்...