மூழ்கும் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று(01) பணித்தார்.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் பாரியாளவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.