Date:

வயிற்றினுள் மறைத்து கொகேய்ன் கடத்திவந்த கென்ய பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (31) விமான நிலைய வளாகத்திலிருந்து கொகேய்னுடன் வெளியேற முயன்ற கென்ய பிரஜையொருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே 650 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து பெருந்தொகையான கொகேய்ன் அடங்கிய வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை விமான நிலைய வளாகத்தில் உள்ள  உடல் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் சோதனையிட்டபோது, அவரது வயிற்றினுள் சந்தேகத்துக்கிடமான பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 39 வயதான கென்ய பிரஜை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...

பூட்டான் நாட்டு UN பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பாதில் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி...

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...