ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணை அவர்களை “கடவுளின் எதிரிகள்” என்று அழைக்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் இது இஸ்லாமிய தலைமையை அச்சுறுத்தும் எந்தவொரு நபரையோ அல்லது ஆட்சியையோ “போர்த்தலைவர்” அல்லது ” மொஹரெப் ” என்று முத்திரை குத்துகிறது.
இது ஈரானிய சட்டத்தின் கீழ் கடவுளுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மொஹரெப் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மரணதண்டனை, சிலுவையில் அறையப்படுதல், கைகால்களை வெட்டுதல் அல்லது நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் 12 நாட்கள் நீடித்த போரைத் தொடர்ந்தே ஈரான் ஷியா இஸ்லாமிய மதகுரு இந்த ஆணையை வெளியிட்டுள்ளார்.