பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை அறிவித்தார்.
அத்துடன் அணியின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.