ஈரான் கணிசமான அளவில் யுரேனியத்தை செறிவூட்டினால், ஈரானுக்கு எதிராக நிச்சயமாக மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று அவர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டதாக டிரம்ப் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.