Date:

பாலஸ்தீனுக்கு கை கொடுக்கும் சவுதி

சவுதி அரேபிய அரசினால் பலஸ்தீன மக்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று (27) அன்பளிப்பாக வழங்கப்பட்டது

 

இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரேபிய அரசு பாலஸ்தீனுக்கு தொடர்ந்தும் உதவும் திட்டத்தின் கீழ் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 9,150,000,000) அன்பளிப்பாக வழங்கியது.

 

கடந்த சில ஆண்டுகளில் சவுதி அரேபியா பாலஸ்தீன மக்களுக்கு உதவும் முகமாக சுமார் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது பாலஸ்தீனுக்கு சவுதி அரேபியா தொடர்ச்சியாக வழங்கும் அதன் ஆதரவின் ஒரு பகுதியான மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மேம்பாட்டு உதவிகளுக்குரியதாகும்.

 

சகோதர பாலஸ்தீன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கும், அவர்களின் துன்பங்களைத் தணிப்பதற்கும் சவுதி அரேபியா தொடர்ந்தும் உதவுகிறது.

 

இது பலஸ்தீன் அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ச்சியாக உதவுவதாக வாக்களித்த சவுதி அரேபியாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பின்னணியிலும், பலஸ்தீன் மக்களுக்கு செய்யும் கடமையுணர்விலும் அமைந்த மிகப் பெரிய மனிதாபிமான உதவியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...