கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
இதன்போது, அல் உதெய்த் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
கத்தார் எப்போதும் “நல்ல அண்டை நாடுகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது” என்றும், ஈரானிடமிருந்து “இதுபோன்ற சட்ட விரோதச் செயலை எதிர்பார்க்கவில்லை” என்றும் கத்தார் அமீர் வலியுறுத்தியதாக பிரதமர் கூறினார்.
பிராந்தியத்தில் உள்ள சட்ட விரோதப் போக்குகளானது “காசாவில் விரிவடைந்து வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களின் விளைவாகும். பிராந்தியத்தில் இஸ்ரேலின் பொறுப்பற்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு உலகமும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது” என்று ஷேக் முஹம்மத் கூறினார்.-