புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகில் குடிபோதையில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆறு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை காலாட்படை பிரிவைச் சேர்ந்த 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு இராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.