Date:

இனிமேல் வெளிநாடு செல்லும் நீங்கள் இதனை செய்து கொள்வது கட்டாயம்!

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.

வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகங்கள் இயங்காத நாடுகளுக்கு செல்வோர் குறித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகம், பணியக விமான நிலைய காரியாலயம் அல்லது மாவட்ட கிளை அலுவலகங்களில் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.

2025 ஜூன் 7ஆம் திகதி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு,...

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத்...

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த...

பாகிஸ்தானின், US தூதரகம் முற்றுகை ; பொலிஸாருடன் மோதல்

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில்...