Date:

இனிமேல் வெளிநாடு செல்லும் நீங்கள் இதனை செய்து கொள்வது கட்டாயம்!

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.

வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகங்கள் இயங்காத நாடுகளுக்கு செல்வோர் குறித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகம், பணியக விமான நிலைய காரியாலயம் அல்லது மாவட்ட கிளை அலுவலகங்களில் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.

2025 ஜூன் 7ஆம் திகதி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...