இலங்கை – போலந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று (28) நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.