Date:

மஹிந்தானந்தவுக்கு பிணை!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற சேதன உரத்தை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிதான நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதமநீதவான் தனூஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை ரூ.50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூபா ஒரு மில்லியன் கொண்ட 5 சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், பிணைதாரர்களில் இருவர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு இத்தனை நோயா நோய் பட்டியல் இதோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ...

“நாங்கள் எதற்கும் தயார்”

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)...

சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய...

Breaking ரணிலுக்கு சரீர பிணை

பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6...