நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களில் ஒரு தரப்பினருக்கு நாளை (22) முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, தாம் கல்வி கற்கும் பாடசாலைகளில் இவ்வாறு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
Date:
16 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி
