Date:

பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று (21) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

கொவிட் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களையும், அதிபர்களையும் வரவேற்பதற்காகப் பாடசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

பல அதிபர் சங்கங்கள், இன்று (21) பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பெருமளவான ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டத்தின் கீழ், 3,000 பாடசாலைகளைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...