Date:

தற்காலிகமாக மூடப்படும் தெமட்டகொடை ரயில் கடவை! | மாற்று வழிகளை பயன்படுத்தவும்!

தெமட்டகொடை ரயில் கடவையில் அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒருகொடவத்தையில் இருந்து பொரளை வரை செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள தெமட்டகொடை ரயில் கடவையில் மே 24 அன்று அவசர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் காரணமாக, அன்று காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை பிரதான வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல் மற்றும் அசௌகரியங்களை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தம்மிக்க ஜயசுந்தர தனது அறிக்கையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...