இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சாரதி உட்பட 81 பேர் பயணத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 பேர் மரணித்த இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனையில், பேருந்தில் இயந்திரக் குறைபாடுகளும் இல்லை என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், சிரேஷ்ட மோட்டார் வாகன பரிசோதகர்களை கொண்ட ஒரு விசேட குழு இந்த விபத்து குறித்து மேலும் விசாரணைகளை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.