Date:

கல்கிஸை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) சந்தேகநபர்கள் மூவர் கொட்டாவ பொலிஸ் பிரிவின் மாக்கும்புர பல் போக்குவரத்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

 

சந்தேகநபர்கள் 31, 32 மற்றும் 34 வயதுடைய கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாள்கள், கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...