Date:

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது வேகமாக பரவியதால், ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகி வருவதால், எம்.ஜி.ஆர்.மகன் படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, அருண்விஜய்யின் ‘வா டீல்’, விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனிமி’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.