Date:

கொழும்பு வாழைத்தோட்டம் சம்பவம் வெளியான மேலதிக தகவல்கள்!

கொழும்பு வாழைத்தோட்டம் (கெசல்வத்த) பீர் சாய்பு வீதியில் உள்ள ஒருவீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை

 

சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்

 

குறித்த சிறுவன் கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் ஒரு கடைக்குச் சென்று, கடைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் கேற்றை தட்டியதாகக் கூறப்படுகிறது.

 

இதன்போது குறித்த வீட்டில் வசிக்கும் ஒருவர் அந்தச் சிறுவர்களில் ஒருவனை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இதன்போது அச்சமடைந்த சிறுவன் அறையில் ஒரு ஜன்னலைத் திறந்து தரையில் குதித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

 

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும், சம்பவத்துக்கு உதவிய 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கெசல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

 

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...