Date:

இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நேற்று(12) பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வந்தமையினால் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 

எவ்வாறாயினும், இன்றும் பொதுமக்களுக்குப் போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு மற்றும் சேவை மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் ஷெரில் அதுகோரல தெரிவித்தார்.

 

அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களில் ஈடுபடும் மக்களின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு மேலதிகமாக 40 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5)...