மியன்மாரில் இன்று (13) காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.