Date:

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.

 

ஏப்ரல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.30 மணி – 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

 

பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதத்தை நடத்தவும், மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தவில்லை’

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை, தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா...

அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப்...

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது...

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...