Date:

மிலேனியம் சிட்டி வழக்கிலிருந்து முன்னாள் ASP உடுகம்பொல விடுவிப்பு

 

2002 ஆம் ஆண்டு அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டுத் திட்டம் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவால் பராமரிக்கப்பட்டு வந்த பாதுகாப்பான இல்லம் பற்றிய தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறி, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சுமார் இருபது வருடங்களாக நீடித்த நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

 

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி அன்று அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டு திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்குச் சொந்தமான ஒரு பாதுகாப்பு இல்லத்தை சோதனையிட்டு, இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதன் ஊடாக அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டிய, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகியை தாக்கல் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...