Date:

முஸ்லிம்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள விஷேட அனுமதி

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை (மீலாது விழா) முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி,  மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஸ் – ஸெய்யித், கலாநிதி ஹஸன் மௌலானா (அல் – காதிரி) வினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளையடுத்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட கடிதமொன்றை, கடந்த 15ஆம் திகதியன்று, சுகாதார அமைச்சுக்கு நேரடியாகச் சென்று ஹஸன் மௌலானா கையளித்தார்.

இதனைக் கவனத்தில் கொண்டே, நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தன்று, (மீலாது விழா) நாடளாவிய ரீதியில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும், கொரோனா சுகாதார வழி காட்டல்களைப் பின்பற்றி, 50 நபர்களுக்கு மேற்படாமல், சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவால் 15ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தில் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக வழிகாட்டல்களை, இலங்கை வக்பு சபை வெகுவிரைவில் அறிவிக்கும் என்றும் இத்தினத்தன்று வக்பு சபையின் வழிகாட்டல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் அஸ் – ஸெய்யித் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...