Date:

காலியில் துப்பாக்கிச் சூடு -ஒருவர் பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சிறிதத் தம்மிக தனது வீட்டிற்கு அருகில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

 

தலையில் மற்றும் மார்பில் பல தோட்டாக்கள் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சிறிதத் தம்மிக, பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

 

இவர் சிறைச்சாலை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால், இந்த கொலை தொடர்பாக பல ஊகங்கள் எழுந்துள்ளன.

 

இதுவரை கொலையின் நோக்கம் தெளிவாகவில்லை என்றாலும், பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...