Date:

மித்தெனிய முக்கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

 

அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குட்டிகல, பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

 

கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகேவும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

 

அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸாரும், தங்காலை பிரிவு குற்ற விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...