Date:

மித்தெனிய முக்கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

 

அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குட்டிகல, பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

 

கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகேவும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

 

அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸாரும், தங்காலை பிரிவு குற்ற விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...