Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மறுதினமே தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களை ஏற்பதற்கான அதிகாரத்தை பெறும்.

அதன்படி, குறைந்தபட்ச நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும். ஆனால் அந்த திகதியில் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு 340 வகையான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதோடு, இதற்கான காலமும் போதுமானதாக இல்லை.

மேலும், சித்திரைப் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு அதிகபட்ச நாட்களைப் பயன்படுத்தும்.

அப்படி நடந்தால், தேர்தல் ஏப்ரல் மாதம் 20 முதல் 30ஆம் திகதிக்குள் நடைபெறும்.

அதன்படி, இதற்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 22 அல்லது 25 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...