Date:

13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – பொலிஸார் வௌியிட்ட தகவல்

 

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

ஏனைய 6 சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த...

உலகத் திருமதி அழகிப் போட்டி;சபீனா யூசுப், மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர்...

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து…

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி,...

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது...