Date:

பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பாராட்டத்தக்கது.

 

நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழங்களுக்கு இறக்குமதி வரியாக ஒரு கிலோகிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரியை ஒரு ரூபாவாக அரசாங்கம் இன்று முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற எமது ஊடக மாநாட்டில் நாம், ஏற்கனவே சவூதி அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 மில்லியன் மேலதிக வரியினை, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு மீளச்செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதே போன்று இவை வியாபார நோக்கில் கொண்டுவரப்படும் பொருட்கள் அல்லாமல் நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக வழங்கப்படுபவை என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

 

மொத்தமாக 500 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் முஸ்லிம்களின் நோன்பு மாத காலத்திற்கு தேவைப்படும் நிலையில், இந்த வரிச்சலுகையை அமுல்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டுக்குரியது.

 

அத்தோடு இவற்றை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக ‘வினைத்திறனான வகையில்’ உரிய மக்களுக்கு சென்றடையும் ஒரு பொறிமுறையை அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கிறோம் சமூக நீதிக் கட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373