Date:

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.

 

அதற்கமைய, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை மேலதிக நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயதுல்லாலி கமேனி பொது வெளியில்…

இஸ்ரேலுடனான தனது நாட்டின் சமீபத்திய 12 நாள் போர் வெடித்ததிலிருந்து ஈரானின்...

சா/த பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த....

அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு...

4 மாகாணங்களில் டெங்கு அபாயம்a

நாட்டில் இந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் வரை 29,412 டெங்கு...