Date:

நுவரெலியா தீ விபத்து : ஒருவர் கைது

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 7ம் திகதி இரவு பரவிய தீயினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வலபனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு,  தெரிவித்தது.

தீ பரவிய வீட்டில் 6 பேர் வசித்து வந்த நிலையில், தீயினால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தீ விபத்து நேர்ந்த வேளையில், உயிரிழந்த வயோதிபரின் மகனான இரவீந்திரன், மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, ராகலை பொலிஸார் உள்ளிட்ட பல விசேட பொலிஸ் குழுக்களின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், உயிர் தப்பிய இரவீந்திரனிடம், ராகலை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணைகளில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபரான இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் ராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் கொள்வனவு செய்துள்ளதாகவும், சம்பவத்தில் வீடு எறிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்திய நிலையில், அவர் நேற்று (12) பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட செயலா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.