Date:

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன மற்றும் மனைவி கைது

 

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 61,46,000 ரூபாய் நிதியை முன்னாள் அமைச்சர் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அவ்வாறு பெற்றுக்கொண்ட நிதியினை நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்தமை என்பவற்றுக்காக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373