Date:

சீனாவுக்கான புதிய தூதரக அலுவலகம்

சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவிக்கின்றது.

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

“எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதிகளை இலவசமாகத் தருவதற்கு மாநிலத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, வெளியுறவு அமைச்சகம் என்ற வகையில், எதிர்காலத்தில் Chengdu நகரில் புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்.”

 

ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இருதரப்புக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...