Date:

பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், குறித்த வீதியில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதிகளில் வௌ்ளநீர் வடிந்தோடியதைத் தொடர்ந்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டது.

 

இதன் காரணமாக பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...